ADDED : நவ 18, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இ ருந்து சாலக்குடி வழியாக அதிரப்பள்ளி அருவியை காண சுற்றுலா பயணியர் நேற்று மதியம், 1:30 மணிக்கு காரில் வந்தனர்.
அப்போது சாலையோரம் காரை நிறுத்த 'ரிவர்ஸ்' சென்ற போது, 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், எர்ணாகுளத்தை சேர்ந்த ஹாஜிஷா, 31, சபான், 6, உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதிர ப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

