/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுக்கு சங்கர் மீதான வழக்கு; சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
/
சவுக்கு சங்கர் மீதான வழக்கு; சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
சவுக்கு சங்கர் மீதான வழக்கு; சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
சவுக்கு சங்கர் மீதான வழக்கு; சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
ADDED : ஜூலை 29, 2025 08:47 PM
கோவை; 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மீதான வழக்கில், புகார் அளித்த எஸ்.ஐ. சாட்சியம் அளித்தார்.
சென்னையை சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற' யு டியூப்' சேனல் நடத்தி வந்தார். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தார் என்று, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த ஆண்டு மே 4ல் கைது செய்யப்பட்டார். பேட்டி எடுத்து வெளியிட்ட யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மீது, கோவை ஜே.எம்:4 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில், நேற்று சாட்சி விசாரணை துவங்கியது.
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜராகவில்லை. புகார் அளித்த சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா சாட்சியம் அளித்தார். விசாரணை செப்.,2 க்கு ஒத்திவைக்கப்பட்டது.