/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு
ADDED : ஜூலை 21, 2025 10:27 PM
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அமுதுகனி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில், 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 6 மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன இதே போல, 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, 16 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.