/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு சந்தை புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பு!: விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுரை
/
மாட்டு சந்தை புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பு!: விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுரை
மாட்டு சந்தை புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பு!: விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுரை
மாட்டு சந்தை புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பு!: விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுரை
ADDED : டிச 13, 2025 07:46 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில், ெஷட் அமைத்தல் உள்ளிட்ட புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான, காந்தி வாரச்சந்தை, 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதை செய்யுமிடம், லாரிப்பேட்டை, தினசரி காய்கறி மார்க்கெட், மொத்த வியாபார அங்காடி உள்ளிட்டவை செயல்படுகின்றன.
இதில், 10 ஏக்கர் பரப்பளவில், மாட்டுச்சந்தை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வெளி நகரங்களிலிருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
மாட்டுச்சந்தையில், செவ்வாய் கிழமைகளில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சந்தையில், வாரந்தோறும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டதால், அதன் அருகே உள்ள காலியிடத்துக்கு மாட்டு சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.
பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் மாட்டுச்சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மழை காலங்களில், மழைநீரும் தேங்குவதால், வியாபாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சேற்றில் நின்று வியாபாரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், வியாபாரிகள், மாடு வாங்க வருவோர் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென வியாபாரிகள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாட்டு சந்தையை மேம்படுத்த, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ஆறு கோடியே, 3 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதில், மாடுகள் நிற்கும் வகையில், ஏழு ெஷட்கள், கழிப்பிட வசதி, மாடுகளை இறக்க, 'ரேம்ப்' வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மாடுகள் ஏற்றி வருவோர், தங்குமிட வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாட்டு சந்தை வியாபாரம் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ெஷட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு மந்தமாக நடைபெற்றது.
பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் குமரன் பணிகளை ஆய்வு செய்தார். நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன், அதிகாரிகள் உடன் இருந்தனர்.தற்போது, ெஷட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பார்வையிட்ட கமிஷனர், பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

