sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்

/

பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்

பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்

பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்


ADDED : மே 19, 2025 11:13 PM

Google News

ADDED : மே 19, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; இருசக்கர வாகன ஸ்டாண்ட் ஏலத்தில் பேரூராட்சிக்கு, 26 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

அன்னுார், பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஸ்டாண்ட் உள்ளது.

இந்த ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் சந்திர மோகன் என்பவர் மாதம் 2 லட்சத்து,10 ஆயிரம் ரூபாய் கட்டணம் பேரூராட்சிக்கு செலுத்துவதாக கூறி ஏலம் எடுத்தார். மறுநாள் வெள்ளிங்கிரி என்பவர் மாதம் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக கூறி பத்து மாத தொகையை பேரூராட்சிக்கு செலுத்தினார்.

இதையடுத்து முந்தைய ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறுஏலம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஏலத்தை நடத்தினர். இதில் ஒட்டக மண்டலம் பாலாமணி என்பவர் மாதம் 2 லட்சத்து 64 ஆயிரத்து நூறு ரூபாய் செலுத்துவதாக கூறி ஏலம் எடுத்து 10 மாதத் தொகையான 26 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தினார்.

கடந்த மார்ச் வரை, ஒரு ஆண்டுக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்து வந்தது.

தற்போது இந்த ஆண்டு ஏலத்தில் பத்து மாதங்களுக்கு மட்டும் 26 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாய் பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us