/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
/
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
ADDED : பிப் 16, 2024 11:33 PM
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ - நாம்' வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
தேங்காய் ஏலத்தில், 31 தேங்காய் மூட்டைகள் வரத்து இருந்தது. அதில், கிலோவுக்கு அதிகபட்சமாக, 27.55 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டு விவசாயிகள், மூன்று வியாபாரிகள் பங்கேற்றனர். 26,203 ரூபாய் மதிப்புள்ள, 9.68 குவிண்டால் தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. வாழைத்தார் ஏலத்தில், மொத்தம், 47 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. கிலோவுக்கு கதளி - 35 ரூபாய், செவ்வாழை - 54.50 ரூபாய்க்கு விற்பனையானது. மூன்று விவசாயிகள், மூன்று வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 19,885 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன.