/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காபி விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
காபி விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 07, 2025 08:53 PM

வால்பாறை: வால்பாறையில் இந்தாண்டு காபி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் காபி மட்டும் 4,517 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காபி செடிகள் முன் கூட்டியே காய்க்க துவங்கியுள்ளன. இதனால், மகசூல் அதிகரிக்கும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது,'வால்பாறையில், தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் இங்குள்ள பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி செடிகளில், பூ பூக்கும். அதன்பின், காய்கள் முற்றியதும், நவம்பர் மாதம் இறுதியில் அறுவடை துவங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்தாண்டு காய்ப்பு அதிகம் உள்ளதால், மகசூல் அதிகரிக்கும்,' என்றனர்.

