/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 8வது முறை குண்டு மிரட்டல்
/
கோவை கலெக்டர் ஆபிசுக்கு 8வது முறை குண்டு மிரட்டல்
ADDED : அக் 16, 2025 09:01 PM
கோவை: கோவை கலெக்டர் ஆபிசுக்கு, எட்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த ஆக. 26ம் தேதி, இ-மெயில் வாயிலாகி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போது, புரளி என்பது தெரியவந்தது.
அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மாதங்களாக பல்வேறு நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. கோவை மாநகர சைபர் கிரைமில் ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், எட்டாவது முறையாக நேற்றும், கோவை கலெக்டர் ஆபிசுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தியும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிய வந்தது.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்கள் தொடர்ச்சியாக 'டார்க் நெட்' வாயிலாக மிரட்டல் விடுப்பதால், ஐ.டி.யை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.