/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
/
கோவை பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
ADDED : செப் 20, 2024 09:28 AM

மதுரை, செப். 20-
கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சாந்தி, 49, சமையல் மாஸ்டரான இவர், கடந்த செப்., 16ம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் டூ - வீலரில் பின்னால் அமர்ந்து சென்றபோது, வேகத்தடையால் தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். அவரது கணவர் பாஸ்கரன் ஒப்புதல்படி, சாந்தியின் உடல் உறுப்புகள் சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, வேலம்மாள் மருத்துவமனை, மதுரை கென்னட் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதன் வாயிலாக 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். சாந்தி உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.