/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,178 தூய்மை காவலர்களை நியமிக்க கலெக்டர் உத்தரவு
/
1,178 தூய்மை காவலர்களை நியமிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 20, 2025 10:57 PM
அன்னூர்; கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 1,178 தூய்மை காவலர்களை நியமிக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவு :
மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரிப்பதில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. எனவே தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ள. நகர்ப்புறத்தை ஒட்டிய கிராம ஊராட்சிகள் மற்றும் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ஊராட்சிகளில், குப்பை அகற்ற வெளி முகமை வாயிலாக (அவுட் சோர்சிங்) பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள, கிராம ஊராட்சிகளில் 401 தூய்மை காவலர்களும், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ஊராட்சிகளில் 777 தூய்மை காவலர்களும் என மொத்தம் 1178 தூய்மை காவலர்களை, அரசு விதிமுறைப்படி அவுட்சோர்சிங் மூலம் நியமித்து அதற்குண்டான செலவை ஊராட்சி நிதியில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அன்னூர் ஒன்றியத்தில், காரே கவுண்டம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சியில் 72 பேர் நியமிக்கப்படுகின்றனர். சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் கொண்டையம்பாளையம் மற்றும் வெள்ளமடை ஊராட்சியில் 48 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

