ADDED : செப் 19, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: விருது பெற்ற தொப்பம்பட்டி ஊராட்சிப் பள்ளி தலைமையாசிரியரை, சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பள்ளித் தலைமையாசிரியர் கணேசனுக்கு, கோவை லயன்ஸ் இண்டர்நேஷனல் வீர வாஞ்சிநாதன் கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இவரை, பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.