sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்

/

வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்

வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்

வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 28, 2024 12:20 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளால், விவசாய பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் வனவிலங்குகள் மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இது மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராமங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து, இன்று காரமடை மேற்கு பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. காலை, 10:00 மணிக்கு மேல்பாவியில் ஆலோசனைக் கூட்டம் துவங்க உள்ளது.

அதை தொடர்ந்து நீலாம்பதி, தோலம்பாளையம், சீளியூர், தாயனூர், கணுவாய்பாளையம், மருதூர், புங்கம்பாளையம், திம்மம்பாளையம், ஏழுசுழி உள்பட, 15 கிராமங்களில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இத்தகவலை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us