/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு
/
ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு
ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு
ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு
ADDED : செப் 02, 2025 08:05 PM
- நமது நிருபர் -
கோவை மண்டலத்தில், 137 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. விவசாய கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கடன் உட்பட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.
2023- ஏப். முதல் 2024 மார்ச் 31 வரை, 47 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி அளவில் மட்டுமே கடன் வழங்கின. மற்ற சங்கங்கள் ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி வருகின்றன.
குறிப்பிட்ட சங்கங்களில் கடன் தொகையை, கூடுதலாக வழங்க வேண்டும் என்ற நோக்கில், அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்தினர், விற்பனையாளர்கள், அரசு அலுவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தி, சிறப்பு முகாம்கள் நடத்தியதன் பலனாக, 47 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 2024 ஏப். முதல் 2025 மார்ச் 31 வரை ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கின. 2026 மார்ச்க்குள், 8 கோடிக்கு மேல் கடன் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கூறுகையில், ''57 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 கோடிக்கு கீழ் கடன் வழங்கி வந்தன. அதில், 21 சங்கங்கள், 8 கோடிக்கு மேல் கடன் வழங்கும் நிலைக்கு வந்து விட்டன.
மீதமுள்ள, 36 சங்கங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது,'' என்றார்.