ADDED : செப் 18, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
ஏ.டி.எம். திருட முயற்சி
காந்திபுரம்: கிராஸ்கட் சாலையில் கே.வி.பி., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை நேற்று முன்தினம் மாலை, ஒரு நபர் உடைத்து திருட முயற்சித்துள்ளார். துாய்மை பணியாளர் சதிஸ்குமார் பிடித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். மேலாளர் மகேஷ் வந்து, திருட முயன்ற நபரை காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்நபர் விருதுநகர் சோலைமலை என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
சரவணம்பட்டி : வேலப்பநாயக்கன்புதுார் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை போலீசார் கண்காணித்தனர். அங்கு பலர் போதைப்பொருட்கள் வாங்கிச்செல்வது உறுதிசெய்து சோதனை நடத்தினர். 645 கிராம் புகையிலை பொருட்கள் சிக்கின. புதுக்கோட்டை முத்துப்பழனி என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
