sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிரைம் செய்திகள்

/

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்


ADDED : ஜூலை 23, 2025 09:21 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

சூலூர் அருகே இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலியானார்.

தேனி மாவட்டம் வடகரையை சேர்ந்த ஆசிக் உலாம், 19. இவர், சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை, வேலை செய்து கொண்டிருந்தபோது, பர்னஸ் இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார்.

சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, நீலம்பரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

தடாகம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தடாகம் போலீசார் ஆனைகட்டி செக்போஸ்ட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நபர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜ்கோபி, 24, சௌமிக், 28, ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, 70 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us