/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி விநாயகர் நகரில் பூங்கா அமைக்க தீர்மானம்
/
சக்தி விநாயகர் நகரில் பூங்கா அமைக்க தீர்மானம்
ADDED : டிச 25, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வெள்ளலுார், சக்தி விநாயகர் நகர் குடியிருப்போர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் செந்தில், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் தன்ராஜ், துணைச் செயலாளர்கள் பாலச்சந்தர், ராஜு, செல்வகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகரில் மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதிகளில், புதிய சாலை அமைத்தல், காலியாக உள்ள இடத்தில் பூங்கா அமைப்பது மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

