sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு

/

பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு

பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு

பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு


ADDED : பிப் 03, 2025 04:02 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை துவக்கி, செயல்படுத்திய, முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில், பாராட்டு விழா மாநாடு வரும் 9ம் தேதி கஞ்சப்பள்ளியில் நடக்கிறது.

இது குறித்த ஆலோசனை கூட்டம் கரியாம்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கும் பாராட்டு விழா மாநாடு குறித்து, அனைத்து ஊராட்சிகளிலும் போஸ்டர்கள் ஒட்டுவது, கழகத் தொண்டர்களுக்கு தகவல் தெரிவிப்பது, அன்னுாரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், பேரவை மாவட்ட இணை செயலாளர் சுந்தரம், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us