sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பயன்படுத்த முடியாத கிராம சாலை போராட்டத்தில் ஈடுபட முடிவு

/

 பயன்படுத்த முடியாத கிராம சாலை போராட்டத்தில் ஈடுபட முடிவு

 பயன்படுத்த முடியாத கிராம சாலை போராட்டத்தில் ஈடுபட முடிவு

 பயன்படுத்த முடியாத கிராம சாலை போராட்டத்தில் ஈடுபட முடிவு


ADDED : டிச 06, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கிராம சாலைகள் பராமரிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாததால், செல்லப்பம்பாளையம் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடுமலை ஒன்றியம், தேவனுார்புதுாரில் இருந்து செல்லப்பம்பாளையம் செல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது.

இவ்வழித்தடத்தை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 10க்கும் அதிகமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியிலுள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களும் இவ்வழியாகவே செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இந்த ரோடு பராமரிக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக மாறி, தொடர் மழைக்கு பிறகு, ரோடே காணாமல் போயுள்ளது.

இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல், பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லாமல், போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை தற்போது உள்ளது. ஆனால், உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் ரோடு பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை.

இதனால், அதிருப்தியில் உள்ள தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம் சுற்றுப்பகுதி கிராம மக்கள் ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us