/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; அபராதம் விதிக்க வலியுறுத்தல்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; அபராதம் விதிக்க வலியுறுத்தல்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; அபராதம் விதிக்க வலியுறுத்தல்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; அபராதம் விதிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2025 09:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், விதிமீறி நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்தம் செய்ய போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை. வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், 'நோ - பார்க்கிங்' என தெரிந்தும், வாகனங்கள் நிறுத்தம் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களாக, விசேஷ நாட்களாக இருந்ததால், நகரில் வாகன போக்குவரத்து அபரிமிதமாக இருந்தது.
இதன் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில், 'நோ - பார்க்கிங்' பகுதிகள் என கண்டறிந்து அங்கு போலீசார், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு வைத்துள்ளனர். இருப்பினும், வாகன ஓட்டுநர்கள், அதனை பொருட்படுத்துவதில்லை. அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பகுதியிலேயே, தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.
தவிர, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தம் செய்ய போதிய வசதிகள் இல்லாததால், காலியாக உள்ள இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை தனித்தனியாக நிறுத்த, வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விதிமுறை மீறுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம்.