/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - -பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா கந்தசாமி பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் - -பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா கந்தசாமி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - -பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா கந்தசாமி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - -பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா கந்தசாமி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 28, 2025 01:04 AM

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' மெகா வினாடி -- வினா போட்டியில், ஆனைமலை அருகே கந்தசாமிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறன்களையும் ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - -வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி --- வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, ஆனைமலை அருகே கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி --- வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த பள்ளி அளவிலான விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எச்' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற பிளஸ் 2 மாணவர் தன்வந்த், பிளஸ் 1 மாணவர் நித்தின் விஜய் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சண்முகம், 'பட்டம்' ஒருங்கிணைப்பாளர் சித்ரா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் சொல்லின்செல்வி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
'பட்டம் பறக்குது!' பள்ளி முதல்வர் சண்முகம் கூறியதாவது:
'பட்டம்' இதழ், பெயருக்கு ஏற்ப வாசிக்கும் அனைவரையும் உயர்த்துகிறது. இதில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள் மற்றும் செய்திகளும் மாணவர்களுக்கு அதிக புரிதலை அளிக்கிறது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய களஞ்சியமாக 'பட்டம்' இதழ் விளங்குகிறது.
துவக்கப் பள்ளி மாணவர்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள், இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. 'தினமலர்' நாளிதழின் இத்தகைய முயற்சி வியக்கத்தக்க வகையில் உள்ளது.

