sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி : அபார திறமை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி 

/

'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி : அபார திறமை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி 

'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி : அபார திறமை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி 

'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி : அபார திறமை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி 


ADDED : நவ 07, 2025 09:26 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சம்ஸ்காரா அகாடமி மற்றும் சாய் சக்தி வித்யாலயா ஆகிய பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் மொழியறிவு, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் குறித்த பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் இத்தகை ய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

பிருந்தாவன் வித்யாலயா பள்ளி கவுண்டம்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 51 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'பி' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஜோஸ்வின் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவி சனா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் மேரி பிரீத்தா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சாய் சக்தி வித்யாலயா மலுமிச்சம்பட்டியில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவி கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'எச்' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பவித்ரா மற்றும் மாணவன் யாதவா விஷ்ணு ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் வளர்மதி, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சம்ஸ்காரா அகாடமி ஒண்டிப்புதூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 65 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'ஏ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அக்ைஷ பிரதிக் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் மோஹித் கிருஷ்ணா ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் லிவ்லின் சேவியர், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

கிப்ட் ஸ்பான்சர்கள்

'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், வினாடி - வினாபோட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சராக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us