sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பனியன் விற்பனை மந்தம்

/

பனியன் விற்பனை மந்தம்

பனியன் விற்பனை மந்தம்

பனியன் விற்பனை மந்தம்


ADDED : ஆக 11, 2011 11:37 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் பருவ மழை சூடுபிடித்துள்ள நிலையிலும், பனியன் விற்பனை சூடு பிடிக்காததால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

வால்பாறையில், பருவ மழை பொழிந்து வருவதால், பரம்பிக்குளம் பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியதால், சேடல் அணை வழியாக, பரம்பிக்குளத்துக்கு திறந்து விடப்பட்டது. இதே போல், அப்பர்ஆழியாறு, காடம்பாறை அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு, தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அதிகாலையில் கடும் பனிப்பொழி, மாலையில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடுங்குளிர் நிலவிய போதும், பனியன் விற்பனை சூடு பிடிக்காததால், நேபாள வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 'ஆண்டுதோறும் பருவ மழை துவங்கும் போது, வால்பாறைக்கு வந்து விடுவோம். கடந்தாண்டை விட தற்போது கடுங்குளிர் நிலவிய போதும், பனியன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை; இது, எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us