/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் 'பட்டம்' இதழ் வழங்கும் விழா
/
தினமலர் 'பட்டம்' இதழ் வழங்கும் விழா
ADDED : ஆக 13, 2025 09:09 PM

கோவில்பாளையம்; எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
மாணவர்களுக்கு தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். உலகச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், அறிவு சார் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, தினமலர் நாளிதழ் வழங்கும் மாணவர் பதிப்பு 'பட்டம்' உதவுகிறது.
எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட, ஆறு பள்ளிகளில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர், 'பட்டம்' இதழை வழங்குகிறது. எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை விமலா வரவேற்றார்.
ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ் ராஜகோபால் பேசுகையில், ''பட்டம் இதழ் மாணவ, மாணவியரின் பொது அறிவை மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டிய பல தகவல்கள் கொண்டதாக, 'பட்டம்' இதழ் உள்ளது,'' என்றார்.
ரோட்டரி கிளப் செயலாளர் துரை, நிர்வாகிகள் மகேஷ் குமார், ரமேஷ் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட தலைவர் செந்தில் ராஜகோபால் நன்றி தெரிவித்தார்.