ADDED : பிப் 02, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீளமேடு: பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

