/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்
/
விதிமுறையை மதிக்காத வாகன ஓட்டுநர்கள்
ADDED : மார் 05, 2026 06:28 AM
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன. வாகன விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், முக்கிய இடங்களில் ரோட்டோரம் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் இயக்க வேண்டும் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதை கவனிக்காமல் பல வாகனங்கள் அதிகவேகத்தில் தாறுமாறாக இயக்கப்படுகின்றன. இதுபோனற விதிமீறல்களால், ஓராண்டில் ஏற்படும் விபத்துகளில், 35 முதல் 40 பேர் உயிரிழக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.
வாகன ஓட்டுநர்கள் எந்த இடத்தில் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். இதைத் தவிர்க்க, வாகன ஓட்டுநர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.

