/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 29, 2025 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; தடாகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடாகம் போலீசார் மற்றும் அவினாசிலிங்கம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலகு - -13, ஆகியன இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. நிகழ்ச்சியில், தடாகம் போலீஸ் எஸ்.ஐ., அய்யாசாமி, அவினாசிலிங்கம் கல்லூரி ஆசிரியர் அருள்ஜோதி மற்றும் காயத்ரி, தடாகம் பகுதி சுகாதாரத்துறை ஆய்வாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது, மாணவியர் போதை பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.