ADDED : ஆக 28, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை கடத்திய ஒருவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையார் சுங்கச் சாவடி அருகே, ஒற்றைப்பாலம் இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையிலான கலால் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி, பயணியரின் உடமையை சோதனையிட்டனர். அதில், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஷாபி, 35, என்பவரின் பேக்கில், 9.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டாமின் என்ற போதை மாத்திரை பதுக்கி கடத்தியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.