ADDED : ஜூலை 18, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இ.கம்யூ., கோவை மாவட்ட 25வது மாநாடு, பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள மீரா மகாலில், நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
இதில் இ.கம்யூ., மாநிலச்செயலாளர் முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, மாநில பொருளாளர் ஆறுமுகம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டு பேரணி நாளை மாலை, 4:00 மணிக்கு, பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., பிரிவில் துவங்கி, பயணியர் கல்லூரி அருகில் முடிகிறது.
இந்த மாநாட்டில் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியமான மக்கள் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.