sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது

/

 கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது

 கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது

 கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது


ADDED : டிச 26, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர், கல்வி இயக்குனர் உத்தரவை மீறி, விடுமுறையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 23ம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து விட்டன. இதையடுத்து டிச. 24ம் தேதி முதல், ஜன. 4-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜன. 5ம் தேதி முதல் செயல்பட உள்ளன.

இந்நிலையில் கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது,' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்னூர் தாலுகாவில், சில தனியார் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியரை 26ம் தேதி சிறப்பு வகுப்புக்கு வருமாறு அழைத்துள்ளன.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'அரையாண்டு விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட முடிவு செய்து இருந்தோம். எனினும் பள்ளி நிர்வாகங்கள், சீருடை அணியாமல் கலர் உடை அணிந்து சிறப்பு வகுப்புக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளன. கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தும் அதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us