/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களின் மகன், மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
/
துாய்மை பணியாளர்களின் மகன், மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
துாய்மை பணியாளர்களின் மகன், மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
துாய்மை பணியாளர்களின் மகன், மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
ADDED : நவ 12, 2025 10:54 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்கள் மகன், மகள்களுக்கு, தாட்கோ வாயிலாக கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு, அடையாள அட்டை மற்றும் அவர்களின் மகன், மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தமிழக தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். தாட்கோ வாயிலாக தூய்மை பணியாளர்களுக்கு, அரசு சார்பில் பல்வேறு கடன் உதவிகள், அவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, தொழில் செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்த பொருளீட்டுக்கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. பொருளீட்டுக்கடன் வங்கிகளில் வழங்காமல், நேரடியாக தாட்கோ அலுவலகத்தின் வாயிலாக வழங்கப்படும். எதிர்காலத்தில் தூய்மைப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள், தூய்மை பணியில் ஈடுபடாமல் இருக்க, அவர்கள் தொழில் செய்யவும், வாகனங்கள் வாங்கவும், கடன் வழங்கப்படும்.
மேட்டுப்பாளையத்தில், 96 தூய்மை பணியாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், 18 நபர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு, கல்வி ஊக்கத்தொகையாக, 27 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு தலைவர் பேசினார்.
விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார், துணைத்தலைவர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமிஷனர் அமுதா வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள்வடிவு மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

