sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

/

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்


ADDED : மே 24, 2025 12:59 AM

Google News

ADDED : மே 24, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், ஏகாதசி வைபவம் நடந்தது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். நேற்று வைகாசி மாத கிருஷ்ண பட்ச, ஏகாதசி வைபவம் நடந்தது.

ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு விஷ்வக்சேனர், ஆராதனம், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் நடந்தது. பின்பு ஸ்தபன திருமஞ்சனமும் நடந்தது.

வைபவ முடிவில், வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், அலுவலர், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us