/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை
/
தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை
ADDED : ஆக 10, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை சிவானந்த புரத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். நேற்று முன்தினம் இவரும் மனைவியும் வேலைக்கு சென்றபின், அவரது பாட்டி சரஸ்வதி மட்டும் வீட்டில் இருந்தார்.
மதியம் 2:45 மணிக்கு வெங்கடேஷின் மனைவியும் மகளும் வீட்டுக்கு வந்த போது, சரஸ்வதி முகத்தில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது.
சரஸ்வதியை மருத்துவமனையில் சேர் த்துவிட்டு, சரவணம்பட்டி போலீசில் வெங்கடேஷ் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.