ADDED : ஆக 18, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநகர் மையக்கோட்ட அலுவலகத்தில், நாளை (ஆக., 20) மின் பயன்பாட்டாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் சாலையில் உள்ள மாநகர் மையக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
இந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் பயன்பாட்டாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொர்டபான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.