sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேயிலை தோட்டத்தில் யானை இறப்பு

/

தேயிலை தோட்டத்தில் யானை இறப்பு

தேயிலை தோட்டத்தில் யானை இறப்பு

தேயிலை தோட்டத்தில் யானை இறப்பு


ADDED : பிப் 11, 2025 11:39 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தேயிலை தோட்டத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த யானையை, வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில், மானாம்பள்ளி வனச்சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள தேயிலை எட்டாம் நெம்பர் தேயிலை தோட்டத்தில், ஏழு வயது பெண் யானை மர்மான முறையில் இறந்து கிடப்பது கண்டறிந்தனர்.

இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி தலைமையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், வனவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில், கால்நடை மருத்துவர் விஜயராகவன், வனகால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர், இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.

மானாம்பள்ளி வனச்சரகத்தில், கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு யானைகள் இறந்தது, இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு உடல் ரீதியாக பிரச்னை உள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆய்வு முடிந்த பின் யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us