sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

/

வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

வீடுகளை சேதப்படுத்திய யானைகள்


ADDED : ஆக 12, 2025 08:53 PM

Google News

ADDED : ஆக 12, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தொழிலாளர் வீடுகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவித்தனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, ஊசிமலை, நல்லமுடி, அக்காமலை பாலாஜி கோவில் அருகில், வாகமலை, முத்துமுடி, வில்லோனி, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.

பகல் நேரத்தில் சோலைக்காடுகளில் இருக்கும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன.

இந்நிலையில், நல்லமுடி எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள மூன்று யானைகள், நேற்று முன்தினம் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புதுந்து, சக்தி, செல்லத்துரை, மூர்த்தி உள்ளிட்ட நான்கு வீடுகளை சேதப்படுத்தியதோடு, துதிக்கையை விட்டு உணவு பொருட்களை தேடின.

இதனால் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும், உள்ளே இருக்க முடியாமலும் தவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை, 4:00 மணிக்கு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் விடிய, விடிய துாக்கமின்றி அச்சத்துடன் தவித்தனர்.






      Dinamalar
      Follow us