sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

/

ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


ADDED : ஜூன் 07, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சுசி ஈமு நிதி நிறுவனம், 7.61 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அந்த நிறுவன அதிபர் குருசாமிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம், ஐந்து ரோடு சிக்னல் பகுதியிலுள்ள காம்பளக்சில், 'சுசி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஆசை வார்த்தையை நம்பி, நுாற்றுக்கணக்கானோர் டிபாசிட் செய்தனர்.

ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் 385 பேரிடம், 7.61 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குன்னத்துார் ரோட்டை சேர்ந்த அந்த நிறுவன நிர்வாக இயக்குநர் குருசாமி, 45, பொதுமேலாளர் கதிர்வேல், ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதான இவர்கள் மீதான விசாரணை, 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி செந்தில்குமார் நேற்று, குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு, 10 ஆண்டுகள் சிறை, 7.89 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us