/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்'
/
'மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்'
'மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்'
'மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்'
ADDED : ஜூலை 17, 2025 10:35 PM

கோவை; ''மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்,'' என, சச்சிதானந்த தீர்த்த ஸ்வாமிகள் அனுக்கிரஹ பாஷ்யம் செய்தார்.
ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரத மஹோத்ஸவத்தை கடந்த, 9 ம் தேதி துவங்கினார். தொடர்ந்து தினமும் சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்து வருகிறது. பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்படுகிறது. நேற்று மாலை ஸ்வாமிகள் அனுக்கிரஹ பாஷ்யம் செய்தார்.ஸ்வாமிகள் பேசியதாவது:மனிதனாக பிறந்த அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும்.
அளவற்ற புண்ணியம் செய்தால் மட்டுமே மனித பிறவி கிடைக்கும். மோட்சம் கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். நமது தர்மத்தை தடையில்லாமல் காக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். நமது வாழ்வியல் நெறிமுறைகளை மறந்து விடக்கூடாது. எங்கு சென்றாலும் நம் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். நம் நித்ய கர்மாவை விடுத்தால் அதில் எந்த பிரயோஜ்னமும் இல்லை. எது கிடைத்தாலும் அதை கடவுள் கொடுத்ததாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மனித மனம் குரங்கு. அதை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த கடவுள் என்றாலும் அந்த கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்வாமிகள் பேசினார்.

