sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பராமரிப்புக்காக விட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு; குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ வைரல்

/

பராமரிப்புக்காக விட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு; குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ வைரல்

பராமரிப்புக்காக விட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு; குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ வைரல்

பராமரிப்புக்காக விட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு; குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ வைரல்


ADDED : நவ 26, 2024 05:53 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரத், 30. இவர் தனது வீட்டில், 11 வயது ஆண் நாயை வளர்த்து வந்தார். சரத், தனது தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததால், நாயை மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனியில் உள்ள தனியார் விலங்குகள் மருத்துவமனையில் ஒரு நாள் பராமரிக்க ஒப்படைத்து இருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சரத்தை மொபைல் போனில் அழைத்து நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு நாய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து நாயை கட்டி அணைத்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. இதை ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இதுகுறித்து சரத் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் ஒருவர் கூறுகையில், “நாயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு வர சில நாட்கள் ஆகும். தற்போது புகாரின் பேரில் சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், நாய் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். அதன் பின் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us