sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

/

யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு


ADDED : நவ 02, 2025 10:09 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானா வாரியாக பயிர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தாச பாளையம் விவசாயிகள் கூறுகையில், 'தற்போது அன்னூர் வட்டாரத்தில் மூன்று முறை மழை பெய்துள்ளது. மழை பெய்துள்ள சமயத்தில் யூரியா உரம் இட்டால் மண்ணில் தழைச்சத்துக் கூடும். பயிர்களும் நல்ல விளைச்சல் தரும்.

ஆனால் கடைகளில் யூரியா உரம் குறைந்த அளவே தருகின்றனர். தேவையான அளவு தருவதில்லை. மேலும் யூரியா உரம் வாங்கும் போது டி.ஏ.பி., சல்பேட் அல்லது வேறு உரம் வாங்க வேண்டும் என உரக்கடைகளில் நிர்பந்தம் செய்கின்றனர்

இதனால் 50 கிலோ யூரியா மூட்டை 296 ரூபாய்க்கு வாங்குவதற்காக 1800 ரூபாய் கொடுத்து வேறு உரங்களையும் வாங்க வேண்டி உள்ளது. மேலும் சில உரக் கடைகளில் யூரியா இருப்பு எவ்வளவு உள்ளது என்னும் பட்டியல் வைக்கப்படுவதில்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us