/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 லட்சம் மோசடி; பெண் ஊழியர் கைது
/
ரூ.2 லட்சம் மோசடி; பெண் ஊழியர் கைது
ADDED : நவ 17, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விற்பனை பிரிவில், பணிபுரிந்து வந்த தடாகத்தை சேர்ந்த மரியாமோள்,30 என்பவர், கடந்த சில நாட்களாக சரிவர பணிக்கு வரவில்லை.
நிறுவனத்தினர் பணி நீக்கம் செய்தனர். இந்நிலையில், அவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரைக் கூறி, வாடிக்கையாளரிடமிருந்து, 2 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக, நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் ரக்ஷனா, சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நேற்று மரியாமோளை கைது செய்தனர்.

