/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித லுார்து அன்னை ஆலயத்தில் திருவிழா
/
புனித லுார்து அன்னை ஆலயத்தில் திருவிழா
ADDED : பிப் 12, 2024 11:36 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலயத்தில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, புனித லுார்து அன்னை ஆலயத்தில், தேர்த்திருவிழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் இரவு, அலங்கரிக்கப்பட்ட புனித லுார்து அன்னை தேர் வாகனம், ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பங்குத்தந்தை ஜேக்கப் தலைமை வகித்தார்.
பாலக்காடு ரோடு, கோவை ரோடு சந்திப்பு, உடுமலை ரோடு சந்திப்பு, போஸ்ட் ஆபீஸ், ராஜாமில் ரோடு, பாலக்காடு ரோடு வழியாக ஆலயத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் பாடிக்கொண்டு கிறிஸ்துவர்கள் சென்றனர்.