sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி குப்பை கிடங்கில் தீ; கல்லுாரி மாணவர்கள் பாதிப்பு

/

நகராட்சி குப்பை கிடங்கில் தீ; கல்லுாரி மாணவர்கள் பாதிப்பு

நகராட்சி குப்பை கிடங்கில் தீ; கல்லுாரி மாணவர்கள் பாதிப்பு

நகராட்சி குப்பை கிடங்கில் தீ; கல்லுாரி மாணவர்கள் பாதிப்பு


ADDED : நவ 21, 2024 09:21 PM

Google News

ADDED : நவ 21, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக, கல்லுாரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகள் ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் உள்ள திறந்தவெளிக் குப்பைக்கிடங்களில் தினமும், எட்டு டன் குப்பை கொட்டப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குப்பைக்கிடங்கில் காலை முதல் மாலை வரை தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால், பொதுமக்கள், அருகில் உள்ள அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறை நகரில் உள்ள திறந்தவெளிக் குப்பைக்கிடங்கு அருகில் குடியிருப்பு பகுதி, அரசு கலைக்கல்லுாரி அமைந்துள்ளது. குப்பைக்கிடங்கில் வைக்கப்பட்ட தீயினால் ஏற்படும் புகை மூட்டத்தால், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், துர்நாற்றத்தாலும், புகை மூட்டத்தாலும், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நகரை துாய்மையாக வைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குப்பைக்கிடங்குகளில் குவிக்கப்படும் கழிவுகளில், சேகரிக்கப்படும் நாப்கின் மட்டும் நோய் தொற்று பரவாமல் தடுக்க எரிக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us