/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் முதல் ஆண்டு விழா
/
மாரியம்மன் கோவிலில் முதல் ஆண்டு விழா
ADDED : ஜன 29, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவில், கடந்த 27ம் தேதி, வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது.
இதில், பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மியில் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம், மூல மந்திர ஹோமம், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், கோதவாடி சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.