sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது

/

நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது

நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது

நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது

1


ADDED : ஜூன் 15, 2025 11:07 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:07 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இடப்பிரச்னையில் டாக்டருடன் தகராறில் ஈடுபட்ட எஸ்.ஐ., உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

செல்வபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருக்கு செல்வபுரம் பேரூர் ரோட்டில், 35 சென்ட் இடம் இருந்தது. இதை 30 ஆண்டுகளுக்கு முன், சற்குணம் என்பவருக்கு இடத்தை பாதுகாக்கவும், விவசாயம் செய்யவும் கொடுத்தார்.

இந்நிலையில் சற்குணம், அவ்விடத்தை தனது பெயரில் மாற்றியதாக தெரிகிறது. இதை, பழனியின் இரு மகள்கள் கண்டுபிடித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அவ்விடத்தை டாக்டர் ஒருவருக்கு விற்பனை செய்தனர்.

அவ்விடத்தை சுத்தம் செய்து, வேலி அமைக்க டாக்டர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்றார். அப்போது சற்குணம், மருமகனும், திருப்பூர் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., யுமான பிரபு, சற்குணத்தின் மகன், பிரதீப் மற்றும் அவரது மகள்கள் இருவர், டாக்டரை தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அவ்விடத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற செல்வபுரம் போலீசார், சற்குணம் உட்பட ஐந்து பேரை கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us