/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
/
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
ADDED : மே 15, 2025 12:15 AM

தொண்டாமுத்தூர், ;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டும், பொது இடங்களில் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என, கடந்த ஜனவரி மாதம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
கோவையில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
உயர்நீதிமன்றம் விதித்த கெடு முடிந்த நிலையிலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், இன்னும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. சில இடங்களில், பொது இடங்களில் இருந்த கொடிகம்பங்களை முழுமையாக அகற்றாமல், பெயரளவிற்கு மட்டுமே அகற்றப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை முழுமையாக அமல்படுத்தி, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் மற்றும் சாலையில் பதிக்கப்பட்டுள்ள கொடிகம்பங்களின் கான்கிரீட் கட்டமைப்புகளை, உள்ளாட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும்.