sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது

/

நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது

நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது

நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது


ADDED : அக் 29, 2025 12:34 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பேரூராட்சியிலும் துவங்கி நடைபெறுகிறது.

அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்க தமிழக அரசு 238 கோடி ரூபாய் ஒதுக்கியது. இப்பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.

கோவை மாவட்டத்தில், கஞ்சப்பள்ளி மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக மையப்பகுதியில் இருந்து இருபுறமும் தலா 10 மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்னுார் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் சாலை அமைக்கும் பணி துவங்கியது. சோமனுார் பிரிவில் துவங்கி நாகமாபுதுார் வரை சாலையின் வடக்கு பகுதியில் 10 மீ., அகலத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அன்னுார் கைகாட்டி, அவிநாசி ரோடு, சத்தி ரோடு சந்திப்பு, சோமனுார் பிரிவு ஆகிய மூன்று இடங்களில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மூன்று இடங்களில் ரவுண்டானா அமைக்க நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us