sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் நிலத்துக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி

/

கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் நிலத்துக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி

கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் நிலத்துக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி

கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் நிலத்துக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி


ADDED : பிப் 10, 2025 11:04 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியதில் மோசடி நடந்துள்ளது என்று கோவை ஈச்சனாரியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ஈச்சனாரியை சேர்ந்த புஷ்பம்மாள், 85, மதுக்கரை கிராமம் 1020/2ஏ, 1021/2ஏ ஆகிய சர்வே எண் கொண்ட நிலம் 2,463 சதுரமீட்டர் நீளம் கொண்டது.

அதை மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தினர். அதற்கு 2,28,80,039ரூபாய் வழங்க அதிகாரிகள் சம்மதித்து எழுத்துப்பூர்வ சம்மத கடிதம் வழங்கினர்.

ஆனால் அதன்படி தங்களுக்கு முறையாக நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை இதுவரை வந்து சேரவில்லை. அதில் சில லட்சங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஒவ்வொரு நிலத்துக்கும் எவ்வளவு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

எந்த அடிப்படையில் வழங்கியிருக்கின்றனர். அதற்கான அளவீடுகள், விலைவிபரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.

அதோடு சம்மந்தப்பட்ட பெண் விவசாயிக்கு ஏன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படவில்லை என்ற விபரங்களை சொல்ல வேண்டும்.

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்திற்கான முழுமையான தொகையை வழங்க வேண்டும்.

இதே போல் பத்திரப்பதிவு ஆவண எண் 7938/2022 ன்படி கையகப்படுத்திய நிலத்திற்கு, 1,53,78,314 தொகை வழங்குவதாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக. 75,11,725 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விசாரிப்பதோடு, முழுமையான அறிக்கையை சமர்பிக்க நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us