/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 03, 2025 09:20 PM
சூலுார்; சூலுார் மற்றும் சோமனூர் சுற்று வட்டார பகுதிகளில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் வரும், ஆக., 27 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்து முன்னணி சார்பில், சூலுார் மற்றும் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், சூலுாரில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலும், சோமனூரில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையிலும் நடந்தது.
அதில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, 'நம்ம சாமி; நம்ம கோவில்; நாமே பாதுகாப்போம்' என்ற கருப்பொருளில் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
மூன்று நாட்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் வழங்கவும், 29ம் தேதி சூலுார், சோமனூரில் விசர்ஜன விழா பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.