/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கு
/
மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கு
ADDED : பிப் 17, 2025 11:48 PM
கோவை; கோவை, வேளாண் பல்கலையில், மண்ணியல் மன்றம், வேளாண் வேதியியல் துறை, இயற்கை வள மேலாண்மை இயக்குநரகம் சார்பில், மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கு நடந்தது. துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.
வேளாண்மையில் மண்ணியல் விஞ்ஞானிகளின் பங்கு, மண்வளம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க மண்ணியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், மண்ணியல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி, இயற்கை வள மேலாண்மை இயக்குநரக இயக்குநர் பாலசுப்பிரமணியம், தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுதாலட்சுமி, முன்னாள் துணைவேந்தர்கள், டீன்கள், இயக்குநர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.