/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு
ADDED : ஜூன் 09, 2025 10:24 PM

பெ.நா.பாளையம்; நடந்து முடிந்த பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற சின்னதடாகம் ஆண்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
சின்ன தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 வகுப்பு பொது தேர்வில் இந்த ஆண்டு பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில், பிளஸ், 2 வகுப்பைச் சேர்ந்த முதலிடத்தை பிடித்த மாணவர் சந்தோஷ் குமார், இரண்டாம் இடம் பிடித்த மாணவர் ரித்திஷ், மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பூபதி ஆகியோருக்கும், 10ம் வகுப்பு சேர்ந்த முதல் இடத்தைப் பிடித்த மாணவர் அரி மாதவன், இரண்டாம் இடத்தைப் பிடித்த மாணவர் சுமன், மூன்றாம் இடத்தை பாதித்த மாணவர் விமல் ஆகிய மாணவர்களுக்கு கோவை ஆர்த்தி ஜுவல்லரி சார்பில், தங்க நாணயம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஜுவல்லரியின் உரிமையாளர்பிரியதர்ஷினி கவுதம், பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமைஆசிரியர் (பொறுப்பு) சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.